தமிழகத்தில் ஒரே கட்டத்தில் தேர்தல். கட்சிகளுக்கு சின்னம்? – விரிவாக பேசிய தலைமை தேர்தல் ஆணையர்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர், பணப்பட்டுவாடா, தேர்தல் நடத்துவது, சின்னம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விரிவாக பேசியுள்ளார்.நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கி பல கட்டங்களாக நடைபெற்று முடிவுகள் மே மாதம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் பரப்புரை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தும் பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் மும்முறம் காட்டி வருகிறது.
அநேகமாக இன்னும் சில நாட்களில் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனயடுத்து, ஒவ்வொரு மாநிலத்திற்கு தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் பயணித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் கருத்துகளை பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் சென்னையில் கடந்த 2 நாட்களாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்தியது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நேரம் ஒதுக்கி கருத்துகளைப் பெற்றுக்கொண்டது.

இந்த நிலையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தமிழ்நாட்டில் 6.19 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக இருக்கிறார்கள். புதிதாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை 9.19 லட்சம். தமிழ்நாட்டில் ஒரே கட்டத்தில் மக்களவைத் தேர்தலை நடத்துமாறு பெரும்பாலான கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. இது கவனத்தில் கொள்ளப்படும்.பணப்பட்டுவாடா மற்றும் மது விற்பனையை தடுக்க அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர். பணப்பட்டுவாடாவை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம், அதனை பொறுத்துக் கொள்ளவும் மாட்டோம். பணப்பட்டுவாடாவை தடுப்பது அனைவரின் கடமை. பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க cVIGIL என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. செயலி மூலம் பெறப்படும் புகார்களுக்கு 100 நிமிடங்களில் தீர்வு காணப்படும்.

 

Leave a Reply