மஞ்சள் எச்சரிக்கை. இன்றும் நாளையும் கனமழை வெளுத்து வாங்கும். தெலங்கனாவுக்கு இந்திய வானிலை மையம் வார்னிங்

மஞ்சள் எச்சரிக்கை

மஞ்சள் எச்சரிக்கை. இன்றும் நாளையும் கனமழை

இன்றும் நாளையும் கனமழை வெளுத்து வாங்கும் என தெலங்கானாவுக்கு வார்னிங் கொடுத்துள்ள இந்திய வானிலை மையம், அடுத்த 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.நாடு முழுவதும் கோடைக்காலம் ஆரம்பித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் தற்போது வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துள்ளது. வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்பநிலை உச்சத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் தெலங்கானாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

சனிக்கிழமையான நேற்று நகரின் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை எட்டியது. இதனை தொடர்ந்து மூன்று நாட்களில் இரண்டு டிகிரி செல்சியஸ் குறையும் என்று கணிக்கப்பட்டது. இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தின் பல பகுதிகளிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.தெலங்கானாவின் கோமாரம்பீம் ஆசிபாபாத், மஞ்சேரியல், கரீம்நகர், ஜெயசங்கர் பூபாலப்பள்ளி, முலுகு, பத்ராத்ரி கொத்தகுடெம், விகாராபாத் மற்றும் சங்கரெட்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் IMD எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இந்த பகுதிகளில் இந்திய வானிலை மையம் அடுத்த மூன்று நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இந்திய வானிலை மைய அறிக்கையின்படி, இந்த திடீர் கனமழை கிழக்கு திசை காற்றின் ஒருங்கிணைப்பு மற்றும் வங்கக் கடலில் இருந்து இழுக்கப்படும் ஈரப்பதம் ஆகிய காரணங்களால் பெய்வதாக தெரிவித்துள்ளது. மேலும் தெலங்கானாவில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்றும் ஆனால் இந்த மழைக்கு பிறகு மாநிலம் முழுவதும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹைதராபாத், அடிலாபாத், குமரம் பீம், நிர்மல், ஜக்தியால், நிஜாமாபாத், காமரெட்டி மற்றும் விகாராபாத் ஆகிய இடங்களில் நாளை மழை பெய்யும் என்றும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply