பாஜகவால கால் கூட வைக்க முடியாது. வீடு வீடாக செல்லும் காங்கிரஸ் செல்வப்பெருந்தகை அதிரடி

பாஜகவால கால் கூட வைக்க

பாஜகவால கால் கூட வைக்க முடியாது

பாஜக காலூன்ற முடியாத ஒரே மாநிலமாக தமிழகம் உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெறலாம் என்னும் நிலையில், தற்போதே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றன. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் 5 ஆண்டுகளாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். செல்வப்பெருந்தகை புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இந்த நிலையில் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், 10 ஆண்டுகால மக்கள் விரோத பாஜக ஆட்சி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி, அரசியல் ஆதாயத்தோடு செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

10 ஆண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணியை ஆட்சியைப் பற்றி பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிற பணியில் பாஜக அரசு ஈடுபட்டிருப்பதாகவும் இத்தகைய ஆதாரமற்ற அவதூறு பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டியது நமது கடமையாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.பாஜக ஆட்சியில் பலனடைந்த கார்ப்பரேட் பெரு முதலாளிகள் கைமாறாக தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் குற்றம்சாட்டிய செல்வப்பெருந்தகை, “பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திர நன்கொடை மூலம் 2018 – 2023 வரை பெறப்பட்ட மொத்த நன்கொடை ரூபாய் 12 ஆயிரத்து 8 கோடி. இதில் பாஜக பெற்ற மொத்த நன்கொடை 6564 கோடி ரூபாய். இது மொத்த நன்கொடையில் 55 சதவிகிதம்” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். கார்ப்பரேட்டுகள் நிதி வழங்குவது ஊழல் இல்லை என்றால் எது ஊழல் என்பதை மோடி அரசும், பாஜகவும் தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் விரோத பாஜக ஆட்சிக்கு எதிராக மாபெரும் பரப்புரை இயக்கத்தை மார்ச் முதல் வாரத்தில் காங்கிரஸ் தமிழகம் முழுவதும் நடத்த இருப்பதாகவும், இதன்மூலம் 10 ஆண்டு மோடி ஆட்சியின் அவலங்களை காங்கிரஸ் கட்சியினர் கிராமம் கிராமமாக, வீடு வீடாக கையில் காங்கிரஸ் கொடிகளை ஏந்திக் கொண்டு துண்டு பிரசுரங்களை விநியோகித்து தீவிரமான பரப்புரை இயக்கத்தை மேற்கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.மேலும், “நாட்டிலேயே பாஜக காலூன்ற முடியாத ஒரே மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. திமுக. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வலிமையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. நாற்பதும் நமதே என்ற இலக்கை நோக்கி நமது பயணம் பீடுநடை போட்டு வருகிறது. அந்த பயணம் வெற்றிப் பயணமாக அமைய காங்கிரஸ் கட்சியினர் மக்களவை தேர்தல் வரை கண் துஞ்சாமல், அயராமல் கடுமையாக உழைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply